பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க வாங்கும் பணம் பட்டும் கடன் அல்ல.
அப்படியெனில் மற்ற கடன்கள் என்ன என்று கேட்கதொன்றுதா....?
நமுடன் வாழ்பவர், நம்மையே ஆதாரமாக நம்பி வாழும் நமது பெற்றோர், மனைவி,
குழந்தைகள், முன்னோர்கள்,நம்மை வாழவைத்த தெய்வம் என அனைவருக்கும்
கடன்பட்டிருக்கிறோம்.நாம் தீர்க்கவேண்டிய கடன்களே நமக்கு பணப் பற்றாக்குறையை
உண்டாக்குகிறது.நோய் ஏற்ப்பட பல காரணங்கள் உள்ளன, கடனும் அதில் ஒன்று.
- தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் 6,8 மடங்காக, ( 6,8,12,16,18,32,36,64,108 ) முறை தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
- கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது.
- முகிகியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.
- இது தவிர மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் தினமும் காலை, மாலை பாராயணம் செய்தால் இன்னும் நல்லது.
எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில்
இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு
படித்தால் நிச்சயம் பலன் உண்டு.
* அனைவரும் எல்லா வளங்களும்
பெற இறைவனை வேண்டுவோமாக *
No comments:
Post a Comment