நான் ரசித்து படித்தது, பார்த்தது, மற்றவர்கள் சொன்னதில் எனக்கு பிடித்தது.
Friday, May 31, 2013
ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி
தினமும் உன் கணக்கில் நான் ரூ‑86,400 டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றே எவ்வளவு
வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்து. அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல்
எஞ்சிய தொகையை நான் திரும்பவும் எடுத்துக் கொள்வேன். செலவானது உனக்கு. மிஞ்சியது எனக்கு
என்கிறது என்று வைத்துக்கொள்வோம். தினமும் ஒரு ரூபாயாவது நீங்கள் மிஞ்சவிடுவீர்களா?முழுபணத்தையும் எப்படி செலவழிப்பது
என்று தினமும் திட்டமிட்டுச் செலவு செய்யமாட்டீர்களா?
உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை
உங்களுக்கு அளித்துள்ளது. அதுதான் காலதேவதை அது பணத்தை விடவிலை மதிப்புள்ள 86,400 விநாடிகளை
உங்களுக்க ஒருநாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்
என்று பாருங்கள் ஒருநாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே
திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒருகுறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று
செய்யத் திட்டமிட்ட பணி இருந்தால் வீண்பேச்சு வேடிக்கை பார்த்தல் அடுத்தவர்கள் விஷயத்தில்
மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் ஈடுபட மாட்டோம் இவையாவும் இலக்கில்லாத வாழ்க்கையின்
இயற்கையான குணாதிசயங்கள், திட்டமிட்டு செய்யப்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத்
தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாய்க் கழிக்கிறோம். ஒவ்வொரு நாள் இரவும்
உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். கால தேவதையின் டெபாசிட் எப்படியெல்லாம்
செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். அப்படி செயல்பட்டிருந்தால் காலம் இன்னும்
சிறப்பாக பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். இனி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகவே
செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள் காலதேவதை கருனை உள்ளது. ஒரு நாள் டெபாசிட்டை
வீணாக்கினீர்கள் எனபதற்காக மறுநாள் அதைத் தராமல் இருப்பதில்லை. தொடர்ந்து உங்களுக்கு
தந்து கொண்டே இருக்கும் அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப்
பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை
உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல
மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.
ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல
மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர்
போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு
செல்வதும், வெட்கத்துடன்
திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி
ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும்.
எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.
ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில்
இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை
என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.
மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற
மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ
மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று
பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.
மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த
தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன.
ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.
எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும்
அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால்
மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி
வைக்கப்படும்.
எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப்
பொழிகிறதோ, அது
போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை
பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.
நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின்
பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற
கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.
தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள்
மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற
ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.
மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம்
கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும்
108 முறை
போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத
செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும்
அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.
- ஜகத் குரு ஆதிசங்கரர் அருளிய
ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் -
நண்பர்களே தப்பா நினைக்கக்கூடாது சமிபத்தில் இந்த வார்த்தைகளின் அர்த்தம் தெரிய வந்தது அதான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று ..............
1. பரதேசி = பர +தேசி = இதன் அர்த்தம் தேஷ் என்றால் நாடு என்று அர்த்தம் பரதேசி என்றால் வேற்று நாட்டுகாரன் என்று அர்த்தமாம் .
2. பேமானி = பே +ஈமானி = இதன் அர்த்தம் ஈமானி என்றால் நம்பிக்கையான என்று அர்த்தம் பே + ஈமானி என்றால் நம்பிக்கை இல்லாதவனே என்று அர்த்தமாம் .
( அர்த்தம் தெரிவதற்கு மின்னே இந்த வார்த்தைகளை யாராவது பயன்படுத்தினால் சற்று கோபம் வரும் , அர்த்தம் தெரிந்தபின்பு எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நீங்களே கோபமா நம்பிக்கை இல்லாதவனே என்று திட்டி பாருங்களேன், எதிரில் உள்ளவர்கள் கோபமே படமாட்டார்கள்..... )
ஒரு ஊரில் ஒரு கிழவரும், கிழவியும் இருந்தனர்... கிழவர் எது செய்தாலும், கிழவிக்கு பிடிக்காது. இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒரு நாள் ஆற்றங்கரைக்கு சென்றார் கிழவர். அங்கே காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்தது ஒரு குருவி.
பரிதாபப்பட்டு அதை வீட்டுக்கு எடுத்து வந்து, ஒரு கூண்டு வாங்கி, அதனுள் வைத்தார் கிழவர். இதை கண்ட கிழவிக்கு கோபம்... "இந்த நொண்டி குருவியை, இங்கு எதற்குக் கொண்டு வந்தாய்?' என்று ஆத்திரப்பட்டு, அந்த குருவியை கூண்டிலிருந்து எடுத்து வீசி எறிந்தாள். பறந்து சென்ற குருவி, பழையபடி ஆற்றங்கரை மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. மறுநாள், ஆற்றங்கரைக்குப் போனார் கிழவர்... அப்போது, "பெரியவரே... நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. அதோ பாரும்... அங்கே மூன்று பானைகள் மூடி போட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒரு பானையை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பாரும்...' என்றது குருவி.
கிழவரும், மூன்று பானைகளில் ஒன்றுடன் வீட்டுக்குப் போய் திறந்து பார்த்தார்... ஒரே ஆச்சரியம்... பானை நிறைய தங்க காசுகள் இருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டார். "இனி செலவுக்கு கஷ்டமில்லை...' என்று எண்ணினார்.
அப்போது அங்கே வந்தாள் கிழவி... "ஏது, இந்த பானை நிறைய தங்க காசு?' என்று கேட்டாள். கிழவரும், தான் ஆற்றங்கரை பக்கம் போனதையும், அந்த நொண்டிக் குருவி, இந்த பானையை காண்பித்ததையும் விவரமாகச் சொன்னார்.
அதைக் கேட்ட கிழவி, "ஓ... அந்த நொண்டிக் குருவியா! சரி... நானும் போய் அந்த குருவியைப் பார்த்துவிட்டு, இதைவிட பெரிய பானையை கொண்டு வருகிறேன் பார்...' என்று சொல்லி, ஆற்றங்கரைக்குப் போனாள்.
அங்கே அந்த குருவி இருந்ததைப் பார்த்தாள். கிழவியை பார்த்து, "எங்கே இந்தப் பக்கம் வந்தாய்?' என்று கேட்டது குருவி. "சும்மா தான் உன்னை பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன். உன்னை அனாவசியமாக நான் வீசியெறிந்து விட்டேன். என்னை மன்னித்து விடு. என் புருஷனுக்கு ஒரு பானையை காண்பித்தது போல், எனக்கும் ஒரு பானையை காண்பிக்க வேண்டும்...' என்று வேண்டினாள் கிழவி.
குருவியும், "கவலைப்படாதே... அதோ இருக்கும் மூன்று பானைகளில், ஒன்றை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பார்...' என்றது. கிழவியும், மூன்று பானைகளில் பெரிதாக இருந்த ஒரு பானையுடன், அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் பானையை திறந்தாள். அவ்வளவுதான்... பானையிலிருந்து தேளும், நட்டுவாக்கலியும் குதித்து ஓடியது கண்டு, ஓவென்று அலறி ஓடினாள்.
அதிக ஆசைப்படக் கூடாது; பொறாமை கொண்டு எதையும் செய்யக்கூடாது. தனக்கு எது கிடைக்குமோ அதைத்தான் அடைய வேண்டும். "அவனுக்குக் கிடைத்ததே... அதே போல் எனக்கும் கிடைக்க வேண்டும்...' என்று நினைக்கக் கூடாது. எண்ணம் போல்தான் எதுவும் கிடைக்கும்; வீண் ஆசை கூடாது.
Sunday, May 26, 2013
மனபலம், தன்னாற்றல், ஆரோக்கியத்திற்குஉகந்தசக்திருத்ராக்ஷம். ருத்ராக்ஷம், மகேஸன்மானிடருக்களித்தஅரியபொக்கிஷம். மின்காந்தஆற்றல்கொண்டருத்ராக்ஷங்கள்நம்தேகத்தில்படும்போதுபலநன்மைகள்விளைவிக்கின்றன. ருத்ராக்ஷங்கள்தன்இயற்பண்புகளால் நமது
இதயத்தை வருடி இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.பழங்கால இதிகாசங்களில் பதிநான்கு முகம்
கொண்ட ருத்ராக்ஷங்கள்பற்றி குறிப்பிடுகின்றன.
ஆனால் 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராக்ஷங்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்து மத சாஸ்திரப்படி,
ருத்ராக்ஷம்ரத்த அழுத்தத்தை
சரி செய்வதற்கும், மனதிடத்திற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்க்கும்அணியப் படுவதாகும்.
தற்போது நவீன உலகின் அணிகலனாய் மாறி வருகிறது
ருத்ராக்ஷம்.
சமயத் துறவிகள் யோகிகள் மட்டமே அணிந்து வந்த உருத்திராட்சம் தற்போது பொன், வெள்ளி வேறு
ஆபரணங்கள் போல், ஆண், பென் வேறுபாடின்றி அனைவரும் அணியும் அணிகலனாய் மாறி வருகிறது.
எலியோகார்பஸ் ஜெனிடராஸ்ராக்ஸ் என்ற மரத்தின் பழக்கொட்டைகளே ருத்ராக்ஷம். இவ்வகை மரங்கள் வட இந்தியா,
நேபாளம், ஜாவா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவை நன்கு
வளர்ச்சியடைய 12 முதல் 15 ஆண்டுகள் ஆகின்றன. இம்மரங்களின் ஆயுள் சராசரியாக
100
ஆண்டுகள். கொட்டைகளின் நடுப்பகுதியில் இயற்க்கையாகவே துவாரம் அமைந்துள்ளது. தாவர வகைகளில்
ருத்ராக்ஷத்தில் மட்டமே இவற்றின் மேலிருந்து கீழாக வெட்டப்பட்டது போன்ற வரிகள்
காணப்படும் இவை முகங்கள் எனப்படும்.
1980இல் பினாரஸ் தொழில் நுட்ப பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்
டாக்டர் சுபாஷ் ராய் தலைமையில் ருத்ராக்ஷம்குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. ருத்திராட்சங்களில்
காணப்படும் முகங்களுக்கு ஏற்ப அவற்றில் இருந்து சக்தி வாய்ந்த மின்காந்த ஆற்றல்வெளிப்படுவதாக
ஆராய்ச்சிகளில் தெரிய வந்த்து. இதன் மூலம் மன அழுத்தம், ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்க
முடியும் என்பதும் தொடர் ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஒரு முக உருத்திராட்சம் அரிய வகை,
5 முக உருத்திராட்சம் எளிதில் கிடைக்கக் கூடியது. இயற்கையாக இரு உருத்திராட்சம் இணைந்து
கிடைப்பதுண்டு இவற்றை கௌரிசங்கர்ருத்ராக்ஷம்என்பர். கொக்கி போன்ற அமைப்புடன் காணப்படும்
ருத்ராக்ஷம்கணேஷ் ருத்ராக்ஷம்.
ஒருமுக உருத்திராட்சம் கவனத்தை ஒருநிலைப் படுத்தும்.
இவ்வுலக தன்பங்களில் இருந்து விடுபடச் செய்யும் தன்மை கொண்டது. ஒரு முகம் அரிது என்பதால்
அரைவட்ட சந்திர வடிவம் கொண்ட ருத்ராக்ஷம்அணியலாம்.
ஐந்துமுக ருத்ராக்ஷம்ஈசனை குறிக்கும் ருத்ராக்ஷம். இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளை
சீர் செய்யும் பண்பு கொண்டது.
ஆறுமுக ருத்ராக்ஷம்நரம்பு மண்டலத்தை சார்ந்து உடலளவிலும், மனதளவிலும்
ஆரோக்கியத்தை அளிக்கும்.
ஏழுமுக ருத்ராக்ஷம்இது அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி
ஒன்றையே அளிக்கும்.
போலிகள்
எச்சரிக்கை
நாகம், திரிசூலம், லிங்கம் போன்ற உருவங்கள்
அமைந்துள்ளதாக விற்பனை செய்யப்படும் உருத்திராட்சங்கள் உண்மையானவை அல்ல. சேதமடைந்தவை,
பூச்சிகளால் தாக்கப்பட்டவை அணிவது ஆரோக்கியமல்ல.
எந்த வயதினரும், எந்த சமூகத்தினரும்
ஆண், பாரபட்சமின்றி உருத்திராட்சங்களை அணியலாம். உருத்திராட்சம் மகேசன் அளித்த பொக்கிஷமாக
கருதப்படுகிறது எனவே இதை அணிவோர் மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்து ஆண்மிக விதிகளை
கடைப்பிடிப்பது அவசியம். பெண்களை பொறுத்தவரை இயற்க்கை விலக்கின் போது 4,5,தினங்கள்
அணிவதை தவிர்க்க வேண்டும். துய்மையான சூழலில் அனிவது சிறந்த்து.
ருத்ராக்ஷம்
அணிபவரை எல்லா தீய சக்திகளிலிருந்தும் நான் காப்பாற்றுவேன். என்னால் சிருஷ்டிக்கப்பட்ட
ருத்திராக்ஷங்களை அணிவோருக்கு நான் மோக்ஷத்தை கொடுக்கிறேன். புத்திர பாக்கியங்களும்,
லட்சுமி கடாக்ஷமும், வேதாந்த விஞ்ஞானமும், குண்டலினி சக்தியும் அருள்வேன். ஏகாதச ருத்திரனாக
இருக்கும் நான் தசமஹா வித்யா ஸ்வரூபத்திலிருந்து, அதாவது உன் ரூபத்தில் பெண்மணிகளின்
தோஷங்களை நீக்குகிறேன். வலிமையைப் பெருக்குவேன். ருத்திராக்ஷத்தை யார் வேண்டுமானாலும்
அணியலாம். இதற்கு எந்தத் தோக்ஷமும் கிடையாது.
என்று பார்வதி தேவியாரிடம் பரிவோடு
உரைத்தார் பரமேஸ்வரன் (ஆதாரம் சிவமஹா புராணம்). இதை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு
நிறைவற்ற செல்வமும், குறையற்ற வாழ்வும் பெற வேண்டும்.