Sunday, May 26, 2013

ருத்ராக்ஷம்

No comments:
 

         மனபலம், தன்னாற்றல், ஆரோக்கியத்திற்கு உகந்த சக்தி ருத்ராக்ஷம். ருத்ராக்ஷம், மகேஸன் மானிடருக்களித்த அரிய பொக்கிஷம். மின்காந்த ஆற்றல் கொண்ட ருத்ராக்ஷங்கள் நம் தேகத்தில் படும்போது பல நன்மைகள் விளைவிக்கின்றன. ருத்ராக்ஷங்கள் தன் இயற்பண்புகளால் நமது இதயத்தை வருடி இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.பழங்கால இதிகாசங்களில் பதிநான்கு முகம் கொண்ட ருத்ராக்ஷங்கள் பற்றி குறிப்பிடுகின்றன. ஆனால் 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராக்ஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்து மத சாஸ்திரப்படி, ருத்ராக்ஷம் ரத்த அழுத்தத்தை சரி செய்வதற்கும், மனதிடத்திற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்க்கும் அணியப் படுவதாகும்.


          தற்போது நவீன உலகின் அணிகலனாய் மாறி வருகிறது ருத்ராக்ஷம். சமயத் துறவிகள் யோகிகள் மட்டமே அணிந்து வந்த உருத்திராட்சம் தற்போது பொன், வெள்ளி வேறு ஆபரணங்கள் போல், ஆண், பென் வேறுபாடின்றி அனைவரும் அணியும் அணிகலனாய் மாறி வருகிறது. எலியோகார்பஸ் ஜெனிடராஸ்ராக்ஸ் என்ற மரத்தின் பழக்கொட்டைகளே ருத்ராக்ஷம். இவ்வகை மரங்கள் வட இந்தியா, நேபாளம், ஜாவா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவை நன்கு வளர்ச்சியடைய 12 முதல் 15 ஆண்டுகள் ஆகின்றன. இம்மரங்களின் ஆயுள் சராசரியாக 100 ஆண்டுகள். கொட்டைகளின் நடுப்பகுதியில் இயற்க்கையாகவே துவாரம் அமைந்துள்ளது. தாவர வகைகளில் ருத்ராக்ஷத்தில் மட்டமே இவற்றின் மேலிருந்து கீழாக வெட்டப்பட்டது போன்ற வரிகள் காணப்படும் இவை முகங்கள் எனப்படும்.
                     
           1980இல் பினாரஸ் தொழில் நுட்ப பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் சுபாஷ் ராய் தலைமையில்  ருத்ராக்ஷம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. ருத்திராட்சங்களில் காணப்படும் முகங்களுக்கு ஏற்ப அவற்றில் இருந்து சக்தி வாய்ந்த மின்காந்த ஆற்றல்வெளிப்படுவதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்த்து. இதன் மூலம் மன அழுத்தம், ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்க முடியும் என்பதும் தொடர் ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
               ஒரு முக உருத்திராட்சம் அரிய வகை, 5 முக உருத்திராட்சம் எளிதில் கிடைக்கக் கூடியது. இயற்கையாக இரு உருத்திராட்சம் இணைந்து கிடைப்பதுண்டு இவற்றை கௌரிசங்கர் ருத்ராக்ஷம் என்பர். கொக்கி போன்ற அமைப்புடன் காணப்படும் ருத்ராக்ஷம் கணேஷ் ருத்ராக்ஷம்.
                     
ஒருமுக உருத்திராட்சம் கவனத்தை ஒருநிலைப் படுத்தும். இவ்வுலக தன்பங்களில் இருந்து விடுபடச் செய்யும் தன்மை கொண்டது. ஒரு முகம் அரிது என்பதால் அரைவட்ட சந்திர வடிவம் கொண்ட ருத்ராக்ஷம் அணியலாம்.

இருமுக ருத்ராக்ஷம் நட்பு, ஒற்றுமை, பக்தியை வளர்ப்பது.

மூன்றுமுக  ருத்ராக்ஷம் தாழ்வு மனப்பான்மை, குற்றவுணர்வு, மனசோர்வு உடையவர்கள் அணியலாம்.

நான்குமுக ருத்ராக்ஷம் நினைவாற்றலையும், அறிவாற்றலையும் பெருக்கும் தன்மையுடையது.

ஐந்துமுக ருத்ராக்ஷம் ஈசனை குறிக்கும் ருத்ராக்ஷம். இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளை சீர் செய்யும் பண்பு கொண்டது.

ஆறுமுக ருத்ராக்ஷம் நரம்பு மண்டலத்தை சார்ந்து உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஏழுமுக ருத்ராக்ஷம் இது அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி ஒன்றையே அளிக்கும்.

போலிகள் எச்சரிக்கை
             நாகம், திரிசூலம், லிங்கம் போன்ற உருவங்கள் அமைந்துள்ளதாக விற்பனை செய்யப்படும் உருத்திராட்சங்கள் உண்மையானவை அல்ல. சேதமடைந்தவை, பூச்சிகளால் தாக்கப்பட்டவை அணிவது ஆரோக்கியமல்ல.

              எந்த வயதினரும், எந்த சமூகத்தினரும் ஆண், பாரபட்சமின்றி உருத்திராட்சங்களை அணியலாம். உருத்திராட்சம் மகேசன் அளித்த பொக்கிஷமாக கருதப்படுகிறது எனவே இதை அணிவோர் மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்து ஆண்மிக விதிகளை கடைப்பிடிப்பது அவசியம். பெண்களை பொறுத்தவரை இயற்க்கை விலக்கின் போது 4,5,தினங்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். துய்மையான சூழலில் அனிவது சிறந்த்து.

ருத்ராக்ஷம் அணிபவரை எல்லா தீய சக்திகளிலிருந்தும் நான் காப்பாற்றுவேன். என்னால் சிருஷ்டிக்கப்பட்ட ருத்திராக்ஷங்களை அணிவோருக்கு நான் மோக்ஷத்தை கொடுக்கிறேன். புத்திர பாக்கியங்களும், லட்சுமி கடாக்ஷமும், வேதாந்த விஞ்ஞானமும், குண்டலினி சக்தியும் அருள்வேன். ஏகாதச ருத்திரனாக இருக்கும் நான் தசமஹா வித்யா ஸ்வரூபத்திலிருந்து, அதாவது உன் ரூபத்தில் பெண்மணிகளின் தோஷங்களை நீக்குகிறேன். வலிமையைப் பெருக்குவேன். ருத்திராக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். இதற்கு எந்தத் தோக்ஷமும் கிடையாது.

என்று பார்வதி தேவியாரிடம் பரிவோடு உரைத்தார் பரமேஸ்வரன் (ஆதாரம் சிவமஹா புராணம்). இதை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு நிறைவற்ற செல்வமும், குறையற்ற வாழ்வும் பெற வேண்டும்.

No comments:

Post a Comment

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff