ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி
தினமும் உன் கணக்கில் நான் ரூ‑86,400 டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றே எவ்வளவு
வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்து. அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல்
எஞ்சிய தொகையை நான் திரும்பவும் எடுத்துக் கொள்வேன். செலவானது உனக்கு. மிஞ்சியது எனக்கு
என்கிறது என்று வைத்துக்கொள்வோம். தினமும் ஒரு ரூபாயாவது நீங்கள் மிஞ்சவிடுவீர்களா?முழுபணத்தையும் எப்படி செலவழிப்பது
என்று தினமும் திட்டமிட்டுச் செலவு செய்யமாட்டீர்களா?
உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை
உங்களுக்கு அளித்துள்ளது. அதுதான் காலதேவதை அது பணத்தை விடவிலை மதிப்புள்ள 86,400 விநாடிகளை
உங்களுக்க ஒருநாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்
என்று பாருங்கள் ஒருநாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே
திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒருகுறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று
செய்யத் திட்டமிட்ட பணி இருந்தால் வீண்பேச்சு வேடிக்கை பார்த்தல் அடுத்தவர்கள் விஷயத்தில்
மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் ஈடுபட மாட்டோம் இவையாவும் இலக்கில்லாத வாழ்க்கையின்
இயற்கையான குணாதிசயங்கள், திட்டமிட்டு செய்யப்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத்
தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாய்க் கழிக்கிறோம். ஒவ்வொரு நாள் இரவும்
உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். கால தேவதையின் டெபாசிட் எப்படியெல்லாம்
செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். அப்படி செயல்பட்டிருந்தால் காலம் இன்னும்
சிறப்பாக பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். இனி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகவே
செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள் காலதேவதை கருனை உள்ளது. ஒரு நாள் டெபாசிட்டை
வீணாக்கினீர்கள் எனபதற்காக மறுநாள் அதைத் தராமல் இருப்பதில்லை. தொடர்ந்து உங்களுக்கு
தந்து கொண்டே இருக்கும் அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
No comments:
Post a Comment